Wednesday 28 November 2018

சந்ததி ! - குமுதம் (05-12-2018) இதழில் வெளிவந்தது

சந்ததி !

“சித்ரா, 10 பாக்கெட் பிஸ்கெட் போதுமா?” என்று கேட்டாள் ஜெயந்தி.

“ரம்யாகிட்ட கேளு. போதும்ன்னா வாங்கு” என்றாள் சித்ரா.


“சித்ரா, குங்குமம் எத்தனை டப்பா வேணும்” என்றாள் ரேவதி.


“ரம்யாகிட்ட கேளு. எவ்வளவு சொல்லுறாளோ வாங்கு” என்றாள் சித்ரா.


“சித்ரா, சரண”யாவை கோயிலுக்குக் கூட்டி போயிட்டு வந்திடவா,” என்றாள் விஜி.


“ரம்யாகிட்ட சொல்லிட்டு கூட்டி போயிட்டு வா” என்றாள் சித்ரா.


“என்ன சித்ரா, எல்லாத்தையும் உன் மகள் ரம்யாகிட்ட கேட்க சொல்லுற.” என்றாள் விஜி.


“நான் 30 வருஷமா எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்கேன். இனிமே நம்ம பிள்ளைகள் பாக்கனும். அது மட்டுமில்லாம, நாமெல்லாம் இருக்கும் போதே, அவர்கள் முடிவெடுக்க விடனும். அவர்கள் தவறான முடிவு எடுக்கும் போது எச்சரிக்கனும். நம்முடைய அனுபவத்தை அவர்களுக்கு சொல்லித்தரனும். 


நாம இருக்கும் போதே நம்ம பிள்ளைகள் திறமையாக நிர்வாகிக்க முடிஞ்சுதுன்னா, அவர்களோட எதிர்காலம் இன்னும் நல்லா இருக்கும். இப்ப, ரம்யாகிட்ட சொல்லிட்டு கூட்டி போயிட்டு வா. விஜிம்மா.” என்றாள் சித்ரா. 


“நல்ல அக்கா, கொடுத்து வைத்த மகள் மட்டுமல்ல, உன் தங்கைகளாகிய நாங்களும்,” என்று சொன்னாள் விஜி.





No comments:

Post a Comment