Wednesday 7 November 2018

சங்கடம் ! - குமுதம் (31-10-2018) இதழில் வெளிவந்தது

சங்கடம் !

“முன்னாடி மாதிரி இல்ல லலிதா. சில்லரை வியாபாரம் குறைஞ்டுச்சி. பெரிய
வியபாரம் ரொம்பக் குறைஞ்சுடுச்சி. அவர் இருக்குற வேலைல சம்பளம் சரியா
தரமாட்டுறாங்க. வேற வேலைக்குப் போகனும்முன்னு நினைச்சா பாதிச் சம்பளம்
தருவேன்னு சொல்லுறாங்க.
அவருக்கு இந்த வேலையும் விடமுடியலை, வேற வேலைக்கும் போக
முடியவில்லை. வீட்டு லோன் சரியா கட்ட முடியவில்லை. வீட்டையும் விற்க முடியாம தவிப்பா போயிட்டு இருக்கோம்.” என்றாள் லெஷ்மி ஆனந்த்.
“அப்படியாம்மா. எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு. அதனாலத்தான் எங்க
வீட்ட விற்க போகிறோம். கவலைபடதீங்கம்மா எல்லாம் சரியாயிடும்.” என்று
வருத்தமாய்ச் சொல்லிக் கிளம்பினாள் லலிதா.
“ஏன் லெஷ்மி, நீ சொன்ன மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்லையே. அப்புறம்
ஏன் அப்படிச் சொன்ன?” என்று வீட்டுக்குள் வந்ததும் கேட்டார் ஆனந்த்.
“இல்லங்க… ஏதோ அவங்களுக்குக் கஷ்டம். அதனால ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டை விற்க போறாங்க. அது எவ்வளவு துயரமானதுன்னு நமக்குத் தெரியுமே... அதனால அவங்க மனசு கஷ்டபடாம இருக்க நாமளும் கஷ்டபடுறோம்ன்னு சொன்னேன்.
நம்ம நிலையைக் கேட்டு, பரவால்ல நம்மல வீட்டை விற்கவாச்சும் முடிச்சுதே என்ற நிம்மதியோடு சந்தோசமா வீட்டை விற்பாங்க!” என்ற லெஷ்மியை மெச்சினான் ஆனந்த்



No comments:

Post a Comment