Wednesday 7 November 2018

இசை இளவரசி ! - பொதிகை மின்னல் (நவம்பர் - 2018) இதழில் வெளிவந்தது

இசை இளவரசி !

“ஏன்டி பிரிதிக்கா, பாட்டு போட்டியில பாடி உலக புகழ்வந்துடுச்சில்ல!” என்றாள் ராகவி.

“ஆமாம்” என்றாள் பிரிதிக்கா.

“பக்கத்து நகரத்துல இருந்து சென்னையில இருக்கிற பெரிய நடிகரே உன் படிப்பு செலவ ஏத்துகிட்டார்.” என்றாள் ராகவி.

“ஆமாம்டி ராகவி. என்ன சொல்ல வர” என்றாள் பிரிதிக்கா.

“நீ சென்னைக்கு போய் பெரிய பள்ளிக்கூடத்தில சேரலாமுல்ல. இந்த மொட்ட கிராமத்தில் இன்னும் இருக்க. அங்கே போனா நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும்.” என்றாள் ராகவி.

“நான் புகழ் பெற்றதே இந்த மண்ணின் மணத்திற்காகத்தான் ராகவி. இந்த ஊர்ல உள்ள எல்லோரும் என்னை தங்கள் வீட்டு குழந்தையா நினைக்கிறாங்க. முதல் முறையா விமானத்தில் வந்து இறங்கிய போது, அவங்க வீட்டு பிள்ளை வெளிநாடு போயிட்டு வந்த மாதிரி ஆரத்தி எடுத்து எல்லாம் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிக்குது.

ஏதாவதுன்னா ஊரே என்னை தாங்கு… தாங்கு… ன்னு தாங்குறாங்க. என் ஆசிரியர்கள், தோழிகள், என்னுள் தன்னம்பிக்கையை விதைத்த என் குரு, எல்லோருடைய அருகிலும் நான் இருக்கனும். 

அதுமட்டுமில்லாம இந்த இசையின் ஞானம் இந்த ஊரும் இந்த
சொந்தங்களும்தான் கொடுத்தது. அதை மற்றவர்கள் உரிமை கொண்டாட நான் விரும்பவில்லை. அவர்களுக்கு இந்த உலகத்தையே இங்கிருந்தே காண்பிக்க வேண்டும். என்பதுதான் என் ஆசை.” என்றாள் பிரிதிக்கா.

"ரொம்ப பெரிய மனசுடி. அதான் இந்த ஊரில் எல்லோரும், எங்கள் ஊர் தேவதை என்று கொண்டாடுகிறார்கள்." என்றாள் ராகவி.




No comments:

Post a Comment