Friday 4 May 2018

மருத்துவம்! - பாக்யா (30-04-2018) இதழில் வெளிவந்தது

மருத்துவம் !

டாக்டர் கல்பனா சுரேஷ் க்ளினிக்ல மட்டும் அதிகமாக கூட்டம் வருது. என் க்ளினிக்ல இரண்டு, மூன்று பேர்தான் வாராங்க. கட்டணம் கம்மியாதான் வாங்குறேன். குறைவான விலையில நல்ல மருந்துகள் எழுதி கொடுக்குறேன். முதல்முறை வராங்க. அடுத்த முறை வரமாட்டுறாங்க. ஏன்னே புரியலை சார்என்று பிரபல மருத்துவமணையின் தலைவர் வாசுதேவனிடம் கேட்டார் டாக்டர் தங்கச்செல்வி.

                அதை கேட்டதும் செய்ய வேண்டியதை சொல்லி அனுப்பினார். அடுத்த சில மாதங்கள் கழித்து, தங்கச்செல்வியிடம் க்ளினிக் பற்றி கேட்டார்.

                “நீங்க சொன்ன மாதிரி நோயாளியாக, கல்பனா க்ளினிக் சென்று பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது, நான் எவ்வளவு தப்பு செய்திருக்கேன்னு.” என்றார் தங்கச்செல்வி.

                “என்ன தப்பு செய்தீங்க?” என்றார் வாசுதேவன்.

                “நோயாளிகள் எது சொன்னாலும் கவனமா கேட்கறது இல்ல, சும்மா சிரிச்சி, அவர்களின் கஷ்டத்தை கிண்டல் செய்திருக்கேன். நாய் குதறுகிற மாதிரி அனைவரையும் வார்த்தைகளால் குதறியிருக்கேன். ஏதோ நான் மட்டுமே கடவுள் மாதிரி தலைக்கனத்தோட மருத்துவம் பார்த்திருக்கேன்.

                ஆனா கல்பனா சுரேஷ் பெயரில் மட்டுமல்லாமல் பேசுவதிலும் கனிவான மொழியில் தான் பேசுகிறார். நோயாளிகள் சொல்வதை மிககவனமாக கேட்கிறார். சரியாகிடும் என்று ஆறுதலாக பதில் சொல்கிறார். அதிலேயே பாதி நோய் சரியாகிடும், அதனால்தான் நோயாளிகளுக்கு உண்மையான கடவுளாக தோன்றுகிறார்.

அதனால்தான் நிறைய பேர் காத்திருந்து அவரிடம் மருத்துவம் பார்த்து விட்டு செல்கிறார்கள், என்பதை உணர்ந்து கொண்டேன்.” என்ற தங்கச்செல்வி மனம் தெளிவடைந்திருந்தது..




No comments:

Post a Comment