Sunday 11 December 2016

புத்துணர்ச்சி! - குமுதம் (11-11-2016) இதழில் வெளிவந்தது

புத்துணர்ச்சி !


“என்ன சார் ஆபிஸ்ல யாரையும் காணும்?” என்று கேட்டபடியே வந்தார் நிறுவனத்தின் ஆலோசகர் பிரேம்.


“எல்லோரும் காபி குடிக்க போயிருக்காங்க.” என்றார் நிர்வாக அதிகாரி சந்திரவர்மன்.


“முன்னாடி எல்லாம் ஆபிஸ்பாய்தானே எடுத்து வந்து கொடுப்பார். ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டார் பிரேம்


“ஆபிஸ்பாய்க்கு பணி உயர் கொடுக்கப்பட்டது. வேறு ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார் சந்திரவர்மன்.


“இல்ல, நீங்க இப்படி சொல்லுறீங்க. ஆனா ஆபிஸ்பாய் சம்பளத்தை மிச்சம் பிடிக்கிறீங்கன்னு எனக்குத் தோணுது. என்ன காரணமுன்னு சொல்லலாமா?” என்றார் பிரேம்.


“அப்படிப் பார்த்தா மற்றப் பணியாளர்களின் சம்பளம் ஆபிஸ்பாய்யை விட பல மடங்கு அதிகம். காபி குடிக்க பணியாளர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் 15 இருந்து 20 நிமிடங்கள். அதை கணக்கிட்டு பார்த்தால், அந்த ஆபிஸ் பாயின் சம்பளத்தைப் போல பல மடங்கு வரும். அதற்கு ஆபிஸ் பாய் ஒருவருக்கே சம்பளத்தை கொடுத்துவிடலாம்.” என்றார் சந்திரவர்மன். 


“அப்புறம் ஏன் ஆபிஸ் பாய் போடலை?” என்று கேட்டார் பிரேம்.


“இங்கு அத்தனை பேருக்கும் கணினியில் வேலை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாது. அதற்கு நேரமும் இருக்காது. இப்படி வேலை பார்த்தால் அவர்களுடைய உடம்புக்கு நல்லதல்ல. அதனால் தான் ஆபீஸ் பாயை நிறுத்தி விட்டு அனைவரையும் படிக்கட்டில் இறங்கி போய் காபி குடிக்க சொல்லியிருக்கிறேன். அந்த நேரத்தில் நடப்பது மற்றவர்களுடன் சிறிது சந்தோசமாக உரையாடுவது போன்ற நிகழ்வுகளால் மனசுக்கு புத்துணர்ச்சி, காபி குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சி.” என்ற சொன்னார் சந்திரவர்மன்.


“உங்கள் ஆபிஸில் வேலை செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்று சொன்ன பிரேம், “நாமும் கீழே சென்று காபி குடித்து விட்டு வருவோமா ?” என்று கேட்க, ஹஹஹஹஹ என்று சிரித்தபடி எழுந்தார் சந்திரவர்மன்.







No comments:

Post a Comment