வலி! - குமுதம் (05-10-2016) இதழில் வெளிவந்தது
வலி !
“ஏங்க, குழந்தைக்கு உடம்பெல்லாம் சூடுகட்டி வந்திருக்கு. வலிக்குதுன்னு சொல்லுறா, டாக்டர்கிட்ட காட்டனும். இன்னிக்கு போகனும்” என்றாள் பிரபா.
“போடி இன்னிக்கு ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு ராணியை, நாளைக்கு அழைத்துப்போகலாம்” என்றான் வசந்த்.
“ஆமாம் வேலையையே கட்டிகிட்டு அழுங்க” என்று எரிச்சலாய் பிரபா.
இரவு 10.30 மணி. வசந்த் நல்ல தூக்கத்தில் இருக்க, கைகளில் ஏதோ உரச, திடுக்கிட்டு எழுந்தான். அருகே ராணி.
“என்னடா பன்னுற செல்லம்? ” என்றான் வசந்த்.
“அப்பா கையில கொசு கடிச்சுது.” என்றாள் ராணி.
“அதனால என்னபன்னுறீங்க?” என்றான்வசந்த்.
“மருந்து தடவுறேன். கொசு கடிச்சா, அப்பாவுக்கு வலிக்குமுல்ல” என்றாள் ராணி.
அவன் ராணியின் வார்த்தைகளுக்கு கண் கலங்க தலை குனிந்தான்.

No comments:
Post a Comment