Wednesday 17 November 2010

மரியாதை - குமுதம் (24-11-2010) இதழில் வெளிவந்தது

மரியாதை !

"என்னடா சோமு, எல்லோரும் உனக்கு வணக்கம் சொல்லுறாங்க, நீயோ! உனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு தேடி போய் வணக்கம் சொல்லுற, அவர் சங்கடமா நெளியுறார்." என்றான் ராமு.

"அவர் அனுபவம் என்னுடைய வயது. 30 வருடமா இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்." என்றான் சோமு.

"அதனால என்ன?" என்றான் ராமு.

"இந்த நிறுவனம் ஒரு கட்டிடம் மாதிரி, அவரை போன்ற மூத்த ஊழியர்கள் ஆரம்ப காலத்தில் கடின உழைப்பையும் பல தியாகங்களையும் செய்ததின் பலனாகதான் நற்பெயர், புகழ், பல கிளைகள் என இந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போன்றவர்கள். அவர்களை விட முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் போல் மற்றவர்களுக்கு எங்களைப் பார்த்தால் தோன்றும், ஆனால் நாங்களோ 2வது தளம், 3வது தளம் போன்றவர்கள், அவர்களுக்கு உதவி செய்யவே நாங்கள்.

அவருக்கு தெரிந்த விசயங்களில் 10 சதவீதம் கூட எனக்கு தெரியாது, தெரிந்த மாதிரி காட்டிக் கொள்வேன். தேடி போய் வணக்கம் சொல்வது அவரின் அனுபவத்திற்குதான்.” என்றான் சோமு.

“சின்ன வயதில், பெரிய பதவியில் இருப்பதன் அர்த்தம் இப்ப புரியுது” என்றான் ராமு.



No comments:

Post a Comment