Thursday 30 June 2011

அவசர வேலை! - குமுதம் (6-7-2011) இதழில் வெளிவந்தது

அவசர வேலை!

''ஏங்க நம்ம குழந்தைய பள்ளிக்கூடம் அழைச்சிட்டு போய் புத்தகம் வாங்கிக் கொடுத்துட்டு ஆபீஸ் போங்க' என்று சொன்னாள் நீலா

''போடி எனக்கு ஆபிஸ்ல அவசரமான வேலை இருக்கு. டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா' என்று சொல்லி விட்டு அலுவகத்திற்கு கிளம்பினான் ராஜன்.

''ஆமாம் பிள்ளையின் பாட புத்தகத்தை வாங்கிக் கூட முடியாமல் அப்படி என்ன ஆபீஸ் வேலையே போங்க' என்று எரிச்சலாய் சொன்னாள் நீலா சிறிது நேரத்தில், நீலா சமையலை முடித்துவிட்டு குழந்தையை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று, புத்தகங்கள் வாங்க வரிசை நின்று கொண்டிருந்தாள்.

அப்போது ராஜனின் முதலாளி மனைவியும் அவரது குழந்தைகளும் பள்ளியிலிருந்து வெளியே வந்தார்கள். பின்னாடியே, முதலாளியின் குழந்தைகளின் புத்தகங்களைத் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தான் ராஜன்.

அவன் முன் முன்னாடி போய் நின்றாள் நீலா. 'இதுதான் அவசரமான வேலையா ? ' என்று கேட்டாள்.

ராஜனால் பதிலே பேச முடியாமல் பேய் முழி முழித்தான்.

No comments:

Post a Comment